|
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.
|
பொருள்::
|
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின்
அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
|
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
|
பொருள்::
|
அழிவுதரும் இயற்கை நிலைஇ அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலைஇ
அதற்கேற்ப அறிவை விரிவாக்கும். |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
|
பொருள்::
|
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே
மேலோங்கி நிற்கும்.
|
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
|
பொருள்:: |
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும்இ ஒருவர்
அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.
|
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
|
பொருள்:: |
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும்இ தீய
செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை
எனப்படும். |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
|
பொருள்:: |
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல்
போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும்
போகமாட்டா.
|
| |
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. |
|
பொருள்::
|
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள்
குவித்தாலும்இ அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். |
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
|
பொருள்:: |
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால்இ தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள்
வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர். |
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
|
பொருள்:: |
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள்இ
தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்? |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
|
பொருள்:: |
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும்இ இயற்கை நிலையே
முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன? |
|