|
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
|
பொருள்::
|
பிறருக்கு தீங்கு செய்வதனால், தமக்கு
வரக்கூடிய பாவம் என்னும் ஒரு வல்லமையுள்ளசக்திக்கு, தீங்கு செய்யும்
இயல்புள்ளவர்கள் அஞ்சுவதில்லை. ஆனால் நல்லவர்கள் அதற்கு அஞ்சவேண்டும்.
|
தீயவை தீய பயத்தலான் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
|
பொருள்::
|
(தீமை செய்வது நெருப்பை விடக்கொடியது.)
நெருப்பு மற்றப் பொருள்களை எரித்து சாம்பலாக்குமேயன்றி நெருப்பு வைத்தவனை ஒன்று
செய்யாது. ஆனால் பிறருக்கு தீமை செய்வது தனக்கே தீமை உண்டாக்குமாகையால், அது
நெருப்பை விடக் கொடியது என்று அதற்கு அஞ்ச வேண்டும்.
|
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.
|
பொருள்::
|
(அதனால்) அறிவுகளுக்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு
எதுவென்றால் பகைவருக்குக்கூடத் தீங்கு செய்யக் கூடாது என்பதே.
|
மறந்தும் பிறன் கேடும் சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.
|
பொருள்:: |
மறந்தார்போலக்கூடப்
பிறனெருவனுக்குக் கேடு உண்டாக்க நினைக்கக்கூடாது. நினைத்தால் அப்போதே தர்ம தேவதை
அப்படி நினைக்கிறவனுக்கு கேடுண்டாக்க நினைத்துவிடும்.
|
இலன் என்று தீயவை செய்யற்கசெய்யின் இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.
|
பொருள்:: |
(ஏழையாக இருந்தாலும்)
பொருள் இல்லையே என்பதற்குத் தீமை எதையும் செய்துவிடக்கூடாது. செய்தால் பொருள்
இல்லாததோடு மற்ற எதுவும் இல்லாது போய்விடும்.
|
தீப் பால தான் பிறர்கண் செய்யற்க நோய்ப் பால தன்னை ஆடல் வேண்டாதான்.
|
பொருள்:: |
(பிறருக்கு தீமை செய்தாலும் செல்வம் வருவது
நிச்சயமல்ல. ஆனால் துன்பம் வருவது நிச்சயம் அதனால்) துன்பம் உண்டாக்கக் கூடிய
தீவினைப் பயன்கள் பின்னால் தன்னை வருத்தப்படாமல் இருக்க விரும்புகின்றவன்,
பிறருக்குத் தீமை செய்யாமலிருக்க வேண்டும்.
|
| |
என்னைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை வியாது பின் சென்று ஆடும். |
|
பொருள்::
|
(ஏனென்றால்)
எப்படிப்பட்ட பகைவர்களிடத்திலும்
தப்பிக்கொள்ளலாம். ஆனால் தீவினைப் பயன்
என்ற பகை நாம் எங்கே போய் ஒழிந்தாலும்
நம்மை விடாமல் பின் தொடரும். |
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வியாது அடி உறைந்தற்று.
|
பொருள்:: |
(எப்படியென்றால்)
தீமை செய்கிறவன் தீமயே அடைவான் என்பது
அவனுடைய நிழல் அவன் எங்கே போனாலும் அவனை
விட்டு விலகாமல் அவன் பாதங்களோடு சேர்ந்தே
இருப்பது போல விலக்க முடியாது. |
தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் துன்னற்க தீவினைப் பால்.
|
பொருள்:: |
பிறருக்கு தீமை செய்யாதிருப்பது பிறருடைய
நண்மைக்காக அல்ல. தன்க்கு துன்பம் வரக்கூடாதென்று. தன்னைத் தானே நேசிக்கிறவன்
பிறருக்கு தீங்குண்டாக்கும் செயல்களின் பக்கத்திற்க்கு கூட நெருங்கக்கூடாது.
|
அருங் கேடன் என்பது அறிக மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்.
|
பொருள்:: |
(அதனால்)ஆத்திரப்பட்டு பிறருக்கு
தீமைசெய்யாமல் இருப்பவனே தனக்கு ஒரு துன்பமும் வராமல் இருக்கக்கூடியவன் என்பதை அறிய
வேண்டும்.
|
|