கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

தவம்.


 Users online ::

         

                        உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.

பொருள்::

எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும்இ எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம என்று கூறப்படும்.


                           தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்::

 உறுதிப்பாடும்இ மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள்இ தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.


                         துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்கள் தவம்.

 

பொருள்::

 துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.


                       ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.

 

பொருள்::

 மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான்இ எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.


                         வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈ.ண்டு முயலப் படும்.

 

பொருள்::

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால்இ அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.


                      தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

 

பொருள்::

 அடக்கமும்இ அன்பு நெறியும்இ துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள்இ ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.

              
  சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

 

பொருள்::

 தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.


                         தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.

 

பொருள்::

தனது உயிர்'' என்கிற பற்றும்இ தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.


                          கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

 

பொருள்::

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.


                          இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

 

பொருள்::

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம்இ மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்இ உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com