கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

ஒப்பரவறிதல்.


 Users online ::

         

                        கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு.

பொருள்::

  (ஒப்பரவறிதல் என்பது என்னவென்றால்) பிரதிபலனைக் கருதாமல் ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமை. பிறருக்கு உதவி செய்வது. மழை பெய்கின்ற மேகம் உலகத்தாரிடம் என்ன பிரதி யுபகாரத்தை எதிர்பார்த்துப் பெய்கிறது?


                           தாள் ஆற்றித்தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்::

(ஒப்பரவறியும் குணம் மிகுந்தவர்கள் எப்படி எண்ணுவார்களென்றால்) பாடுபட்டுச் சம்பாதிக்கின்ற செல்வமெல்லாமுதவி பெறத்தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான்.


                        புத்தேன் உலகத்தும்  ஈண்டும் பெறல் அரிதே ஒப்பரவின் நல்ல பிற.

 

பொருள்::

 தேவலோகத்தினாலும் பூலோகத்தினாலும் பரோபகாரம்செய்யும் குணத்தைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை.


                       ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.

 

பொருள்::

   (பிறருடைய துன்பங்களைக் கண்டாலும் மனம் இரங்காதவர்கள் இருக்கிறார்களே)  தனக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களே ம்ற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவி செய்கிறவன்தான் உயிருள்ள மனிதன். அந்த உணர்ச்சி இல்லாதவன் செய்த பிணத்துக்கே ஒப்பானவன்.


                         ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு.

 

பொருள்::

 (அளந்து கொடுக்கிற அறிவாளியின் ஒப்பரவு எப்படி என்றால்) உலகத்தார் விரும்பத்தக்க நல்ல அற்வாளியிடத்தில் செல்வமிருப்பது ஊரிலுள்ளவ்ர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு தக்கபடி குடி தண்ணீர் கொடுத்துதவுகிர குளத்தில் நீர் நிறைந்திருப்பது போன்றது.


                      பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்செல்வம் நயன் உடையான்கண் படின்.

 

பொருள்::

அறிவு கொண்டு உபகாரம் செய்கிறவனைவிட உயர்ந்தவனாகிய அன்பு கொண்டு உபகாரம் செய்கிறவன் ஒப்பரவு எப்படியென்றால்) அன்புடையவரிடத்தில் செல்வமிருந்தால், நல்ல பழந்தரக்கூடிய மரம் நடு ஊரில் பொது நிலத்தில் பழுத்திருப்பது போல் அவர்கள் விரும்பியபடி அவர்களிடைய தேவைகளுக்கு அதிகமாகவும் அவர்களே எடுத்துக்கொள்ள உதவும்.

              
  மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

 

பொருள்::

 (அறிவாளிக்கும் அன்பாளிக்கும் உயர்ந்தவனாகிய தியாகியின் ஒப்பரவு எப்படியென்றால்) பெருந்தன்மையுள்ளவனிடத்தில் செல்வம் இருந்தால், மூலிகைச்செடியானது தன் இலை, பூ காய் பட்டை முதலியவைகளை மருந்துக்கென்று கொடுத்துக் கடைசியில் வேரோடும்தன்னைப் பிடுங்கிக்கொள்ளவும் உதவுவது போலத் தன்னையேகூட அழித்துக்கொண்டு பிறருக்கு உபகாரமாகும்.


                      இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன் அறி காட்சியவர்.

 

பொருள்::

(மனிதப் பிறவியின் கடமைகளை அறிந்தவர்கள் பிறர்க்கு உபகாரம் செய்யச் செல்வமுள்ளவ்ர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை) கடமையை உணரும் அறிவுடையவர்கள் செல்வம் இல்லாவிட்டாலும் உபகாரம் செய்யப் பின்வாங்கமாட்டார்கள்.


                        நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயு நீர செய்யாது அமைகால ஆறு.

 

பொருள்::

ஒப்புரவு அறிந்த இரக்கமுள்ளவன் தன்னை ஏழையென்று எண்ணுவது பிறருக்கு உபகாரம் செய்ய முடியாத சமயத்தில் தான்.


                         ஒப்புரவினால் வரும்கேடு எனின் அ/து ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து.

 

பொருள்::

பிறருக்கு உபகாரம் செய்வதனால் வறுமயே வருமென்றாலும் அப்படிப்பட்ட வறுமை விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்வதில் நண்மையுண்டு.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com