|
ஒழுக்கத்து தீத்தார் பெருமை விழுப்பது
வேண்டும் பனுவல் துணிவு.
|
பொருள்::
|
எஒழுக்கம் தவறாமல் ஆசாபாசங்களை நீக்கி
வாழ்ந்து சென்ற மகான்களின் பெருமையை
போற்றுவது நன்மைதரக்கூடியது அதை முதலில்
செய்யவேண்டும். |
துறந்தார் பெருமைதுணைக் கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டாற்று.
|
பொருள்::
|
முற்றுந்
துறந்த அம்மகான்களின் பெருமை அளவிட
முடியாதது. அதைக் கணக்கெடுப்பது உலகத்தி
எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறாந்தார்கள்
என்பதைக் கணக்கெடுக்கப் புகுவதற்கு
ஒப்பாகும். |
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
|
பொருள்::
|
பிறப்பு
இறப்பு என்ற இரண்டின் தத்துவங்களை
உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தின
மகான்களின் பெருமையினால்தான் இந்த உலகம்
ஞான ஒளி பெற்றிருக்கிறது. |
உரன் என்னும்தோட்டியான்ஓர்ஐந்தும்
காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர்
வித்த
|
பொருள்:: |
வைராக்கியம் என்ற அங்குசத்தால் ஐந்து
இந்திரியங்களான மதயானைகளை
அடக்கியாண்டு உலகத்திற்கு நண்மை
உண்டாக்கக்கூடிய தெய்வீக சக்திக்கு
இருப்பிடமானவர்கள் அம்மகான்கள். |
ஐந்து அவித்தான் ஆற்றல், அகல்
விசும்புளார் கோமான் இந்துரனே சாலும் கரி.
|
பொருள்:: |
(ஐந்து
இந்திரியங்களை அடக்குவது ஆன்ம சக்தி
தருவதற்கும் அல்லாமல் உலகத்திலேயே மேலான
இன்பங்களை அடையவும் ஆற்றல் தரும்) ஐந்து
இந்திரியங்களையும் அடக்குவதால்
அடையக்கூடிய ஆற்றலுக்கு, இந்திரியங்களை
அடக்கி யாகங்களைச் செய்து இந்திர பதவி
அடைகின்ற தேவேந்திரன் கதையே சாட்சியாகும். |
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரியசெய்கலாதார்.
|
பொருள்:: |
மற்றவர்கள் செய்ய முடியாத அபூர்வ
காரியங்களைச் சாதிக்கக்கூடியவர்களே
நீத்தார் எனப்பட்ட பெரியவர்கள். அப்படிச்
செய்ய முடியாத துறவிகள் நீத்தரல்லர்.
இங்கே சொல்லவந்தது.அந்தச்சிறிய துறவிகளைப்
பற்றியன்று. |
| |
சுவை ஒளி ஊறு
ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை
தெரிவான்கட்டே உலகு. |
|
பொருள்::
|
சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து
உணர்ச்சிகளையும் அவற்றைப்பற்றிய
உண்மைகளையும் அறுந்து அவற்றை வசப்படுத்திய
பெரியோரைத்தான் உலகத்தில் அறிவுடையோர்
போற்றி வந்திருக்கிறார்கள். |
நிறைமொழி மாந்தர் பெருமை நலத்து மறை மொழி
காட்டி விடும்.
|
பொருள்:: |
அந்த
மகான்கள், சொன்னது பலிக்கும் தவ
வலியுள்ளவர்கள் அவர்கள் பெருமையை வேதங்கள்
காட்டுகின்றன. |
குணம் என்னும் குன்று ஏறி நின்றான் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
|
பொருள்:: |
(அவர்கள்
சொன்னது பலிக்குமென்றால் அவர்கள் பிறரைச்
சபிப்பது தீமை செய்யமாட்டார்கள் ,தமது
செல்வாக்கை நண்மைக்கே செலவிடுவார்கள்)
நீத்தார் எனப்படுவோர் நல்ல குணம் என்ற
மலையின் உச்சியிலே இருப்பார்.அதனால்
வர்களுக்கு கோபமே வராது வந்தாலும்
கணநேரங்கூட தாங்காது. |
அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்
உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்.
|
பொருள்:: |
அவர்கள்
சாந்ததின் நிலையமானவர்கள். தர்மம்
தவறமாட்டார்கள். எல்லா சீவராசிகளிடத்தும்
அன்பையே மேற்க்கொண்டு நடப்பவர்கள். |
|