கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

நடுவு நிலமை.


 Users online ::

         

                        தகுதி என ஒன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்::

 (ஒரு வழக்கைத் தீர்த்துவிட நடுவுநிலைமையாகப் பாரபட்சமிக்லாதிருக்க வேண்டிய ஒருவன்) வழக்கினால் கருத்து வேற்றுமைப் பட்டவர்களுடைய நிலையில் தன்னை ந்றுத்திக்கொண்டு ஆரய்ந்தால் நடுவு நிலமை சரியாக இருக்கும்.


                           செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

பொருள்::

 (வழக்கைத் தீர்ப்பவன்) ஓரவஞ்சகனற்றவனாக நடந்து கொண்டால் அந்தப் பெருமை அழியாமலிருந்து அவனுடைய பரம்பரைக்கு பாதுகாப்பாகும்.


                        நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.

 

பொருள்::

 (ஓர வஞ்சகத் தீர்ப்பு செய்வதால் பெருத்த செல்வம் வருவதாக இருந்தாலும்) எவ்வளவு நல்லதானாலும் நடுவு நிலமையான நேர்மையை விட்டு விட்டு அடயக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும்.


                       தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப் படும்.

 

பொருள்::

(ஓர வஞ்சனையால் வருகின்ற செல்வம் சந்ததியை கெடுத்து விடும்) ஒருவன் நடுவு நிலமை தவறாமல் இருந்தவனா அல்லவனாஎன்பதை அவனுடைய சந்ததிகளில் கண்டுகொள்ளலாம்.


                        கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி.

 

பொருள்::

 (அதனால்) ஏழையாக இருப்பதும் பனக்காறனாக இருப்பதும் உலகத்தில் எல்லாருக்கும் உள்ளதுதான். எவ்வளவு செல்வம் வருவதானாலும் மனம் நேர்மையை விட்டு (செல்வத்தைக் கருதிக்) கோணாமல் இருப்பதுதான் உயர்ந்தகுணமுடையவர்களுக்குச் சிறப்புத்தருவது.


                     

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் நடுவ ஒரீ இ அல்ல செயின்.

 

பொருள்::

 (நடுவு நிலமை தவறக்கூடாது என்பதை ஒருவனுடைய மனச்சாட்சியே சொல்லும்) ஒருவன் நடுவு நிலமை தவறிப் பாரபட்சமாக ஒரு தீர்ப்பு சொல்ல நினைக்கும் போது அவனுடைய மனச்சாட்சி "நான் கெட்டுப்போவேன்" என்று எச்சரிக்கும். அதை அறிய வேண்டும்.

   

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக் கண் தங்கியான் தாழ்வு.

 

பொருள்::

 (நடுவு நிலைமையுள்ளவன் ஏழையாக இருந்தாலும்) நடுவு நிலைமை தவறாமல் நடந்து கொள்ளும் ஒருவன் ஏழையாக இருப்பினும் அதை ஒரு குறையாக எண்ணாமல் உலகம் அவனைச் சிறப்புள்ளவனாகவே மதிக்கும்.


                         சமன்செய்துசீர்தூக்கும்கோல்போல்அமைந்துஒருபால்கோடாமை சான்றோர்க்கு அணி.

 

பொருள்::

(ஒரு வழக்கை தீர்க்கும் போது) துலாக்கோல் போல நேர்மை கோணாமல் வழக்கைச் சீர் தூக்கிப் பர்த்து ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் இருப்பதுதான் மேலான குண்முள்ளவ்ர்களின் சிறப்பு.


                         சொற் கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உட் கோட்டம் இன்மை பெறின்.

 

பொருள்::

 (அதனால்) மனம் ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் இருந்தால் வழக்கில் தீர்ப்புச்சொல்லுவதும் நடுவு நிலைமைதவறாததாகவே இருக்கும்.

                          வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போல் செயின்.

 

பொருள்::

பிறருடைய பண்டங்களையும் தம்முடைய பண்டங்களைப் போல் நிறுப்பதுதான் வியாபாரிகளின் சிறப்பு. அதுபோல் பிறருடைய வழக்கையும் தம்முடைய வழக்காகச் செய்வதுதான் நடுவு நிலைமையின் சிறப்பு.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com