கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

மக்கட்பேறு


 Users online ::

         

                        பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற.

பொருள்::

நாம் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்கு தெரிய வில்லை.


                           எழுபிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

பொருள்::

(அறிவுடையவர்களகிய இருப்பதன் பயனாக) பழிபாவங்களுக்கு ஆளாகிவிடாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்ற தாய்தந்தையர் அவர்களுடைய அடுத்த ஏழு பிறப்புகளிலும் கூடத் துன்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.


                        தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள் தம் தம் வினையான் வரும்..

 

பொருள்::

தம்முடைய மக்கள் தமக்குச் செல்வம். என்றாலும், செல்வத்தைப்போல மக்களும் பல நண்மைகளுக்கு உதவக்கூடிய நற்குண் நற்செயல்கள் அமைந்தவர்களாகப் பிறப்பது மக்களைப் பெற்றவர்களுடைய வினைப்பயனைப் பொருத்துத்தான்.


                       அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிது கை அளாவிய கூழ்.

 

பொருள்::

(மக்களுடைய குணங்கள் அனுபவிப்பது பின்னாலிருக்க அம்மக்கள் குழைந்தைகளாக இருக்கும் போது) நம் குழந்தைகள் அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளை விட்டிக்குழப்பிய சோறு அமிர்தத்தைவிட இனிமைதரும்.


                      மக்கள் மெய்தீண்டல்உடற்கு இன்பம்மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.

 

பொருள்::

 (மேலும்) தாம் பெற்ற குழந்தகளின் உடல் தம் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பம் அளிக்கும். தாம் பெற்ற குழந்தைகளின்  பேச்சை கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்.


                      குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.

 

பொருள்::

(பேச்சைவிட மழலைச்சொற்கள் அதிக இன்பமளிப்பன) தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச்சொற்களை கேட்கக்கொடுத்து வத்தவர்கள் தாம் புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமயானது என்று சொல்லுவார்கள்.

              
  தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முஎதி இருப்பச் செயல்.

 

பொருள்::

 (குழந்தைகளை வளர்ப்பதில்) தகப்பன் மகனுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியம் என்ன வென்றால், தன் மகன் கற்றவர் சபையில் முதல் வரிசையில் சிறப்புடையவனாக விளங்கும் படி(கல்வி கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைக்க வேண்டும் என்பதுதான்.


                    தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து  மண் உயிர்க்கு எல்லம் இனிது.

 

பொருள்::

  தம்மைவிடத் தம்முடைய மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது.

   

            ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோர் என்க் கேட்ட தாய்.

 

பொருள்::

 (தன் மகன் அறிவுடையவாய் விளங்குகிறான் என்பதைவிட) தன் மகன் மிக உயர்ந்த குண்முடைய நல்லவனாக இருக்கிறான் ஊரார் புகழ்வதைக் கேட்கிறபோது ஒரு தாய். தன் மகனை அவள் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைவாள்.


                    மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன் தந்தைஎன நோற்றான்கொல்  எனும் சொல்.

 

பொருள்::

தன்னைப் பெற்று வளர்த்துக் கல்வியறிவூட்டிச் சிறப்படைய செய்த பெற்றோருக்கு) மகன் தந்தைக்கு செய்யவேண்டிய நன்றி என்ன வென்றால், எப்படிப்பட்ட அறிவும் நற்க்குணமும் உள்ள மகனைப் பெற்ற இவன் தந்தை என்ன அதவம் செய்தானோ..? என்று உலக்த்தார் சொல்லும் புகளுரைதான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com