கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கொல்லாமை.


 Users online ::

         

                        அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.

பொருள்::

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.


                           பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

பொருள்::

 இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல்இ கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டுஇ எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.


                         ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.

 

பொருள்::

 அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.


                       நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்  கொல்லாமை சூழும் நெறி.

 

பொருள்::

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.


                         நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.

 

பொருள்::

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.


                      கொல்லாமைமேற்கொண்டொழுகுவான்வாழ்நாள்மேல்செல்லாதுயிருண்ணுங் கூற்று.

 

பொருள்::

 கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்துஇ சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

              
  தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை.

 

பொருள்::

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈ.டுபடக்கூடாது.


                         நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.

 

பொருள்::

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும்இ நல்ல பண்புடைய மக்கள்இ அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.


                          கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.

 

பொருள்::

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம்இ இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.


                          உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

 

பொருள்::

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர்இ ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com