கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கள்ளாமை.


 Users online ::

         

                         எள்ளாமை வேண்டுவானென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமைகாக்கதன் நெஞ்சு.

பொருள்::

எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.


                           உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்.

பொருள்::

 பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.


                         களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும்.

 

பொருள்::

 கொள்ளயடித்துப் பொருள் குவிப்பதுஇ முதலில் பெரிதாகத் தோன்றினாலும்இ அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.


                       களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும்.

 

பொருள்::

 களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம்இ அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.


                         அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

 

பொருள்::

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில்இ அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.


                      அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

 

பொருள்::

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள்இ களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

              
   களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்.

 

பொருள்::

 ளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம்இ களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.


                         அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங் களவறிந்தார் நெஞ்சில் கரவு.

 

பொருள்::

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.


                          அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.

 

பொருள்::

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள்இ வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.


                          கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்  தள்ளாது புத்தே ளுலகு.

 

பொருள்::

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோஇ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com