|
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
|
பொருள்::
|
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப்
பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
|
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
|
பொருள்::
|
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை
அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும். |
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
|
பொருள்::
|
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப்
பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
|
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
|
பொருள்:: |
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழிஇ அவர் வெட்கித்
தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
|
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.
|
பொருள்:: |
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற
முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை. |
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.
|
பொருள்:: |
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றைஇ
மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
|
| |
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. |
|
பொருள்::
|
எவ்வளவிலும்இ எப்பொழுதும்இ எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல்
இருப்பதே முதன்மையான சிறப்பாகும். |
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
|
பொருள்:: |
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப்
பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? |
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
|
பொருள்:: |
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதேஇ
அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். |
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மைவேண்டு பவர்.
|
பொருள்:: |
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை
விரும்புகிறவர்கள்இ பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது. |
|