|
இன் சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்
சொல்.
|
பொருள்::
|
இல்வாழ்க்கையில் பயன்களைச் செய்யாமையாக அறிந்தவர்களுடைய
வயிலிருந்து வெளிவரும் சொற்கள் இனிமையாகவும் அன்புகலந்தவையாகவும் வஞ்சக நோக்கம்
இல்லாதவனாகவும் இருக்கும். இதுதானினியவை கூறல்.
|
அகன் அமர்ந்து ஈதலின் நற்றே முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப்
பொறின்.
|
பொருள்::
|
(இந்தக்குணம் தானம் கொடுப்பதிலும் சிறந்தது) முக மலர்ச்சியோடு
இனிய வார்த்தைகளை சொல்வது மனபூர்வமாக தானம் கொடுப்பதிலும் நல்லது. |
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானம் இன் சொலினதே அறம்.
|
பொருள்::
|
(தர்மம் என்பதே இனியவை கூறுவதில் அடங்கி விடும்) முக
மலர்ச்சியோடு இனிமை தரப்பார்ப்பதே. மனப்பூர்வமாக இனிய வார்த்தைகளைச் சொல்லுவதே
அறங்களின் அடிப்படை.
|
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும் இன் புறூ உம் இன்
சொலவர்க்கு.
|
பொருள்:: |
(அப்படிப்பட்டவர்களுக்கு வறுமையே வராது) யாரிடத்திலும் இன்பம்
உண்டாகக்கூடிய இனிய சொற்களையே பேசுகின்றவர்களுக்குத் துன்பந் தருகிற பசிப்பிணியே
வராது. |
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற.
|
பொருள்:: |
(பசி வராமல் இருப்பதாக மட்டுமல்ல) வணக்கமுடையவனாகவும் இனிய
சொற்களே பேசுகிறவனாகவும் இருப்பதுதான் மனிதனுக்கு அழகு. அது மட்டுமல்ல. அதனால் வேறு
பல நண்மைகளும் உண்டு.
|
அல்லவை தேய அறம் பெருகும் நில்லவை நாடி இனிய சொலின்.
|
பொருள்:: |
(அந்த வேறு பல நண்மைகள் என்ன வென்றால்) நல்ல எண்ணத்தோடு நல்ல
சொற்களையே பேசினால் பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும்.
|
| |
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச்
சொல்.
|
|
பொருள்::
|
(நல்ல எண்ணம் என்பது பிறருக்கு நண்மை வர எண்ணுவது) பிறருக்கு
நண்மை உண்டாகும் படிசொல்லுவதன் பண்பு கெடாதபடி இனிய வார்த்தைகள் பேசுகின்றவனுக்கு
அருள் குணத்தை உண்டாக்கிப் பல நண்மைகளைச்செய்யும். |
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
|
பொருள்:: |
(அதனால் இன்மைக்கு மட்டுமல்ல மறுமைக்கும் உதவும்) மனதில் கெட்ட
எண்ணம் இல்லாமல் இனிய சொற்களையே பேசினால் அது இன்மை மறுமை இரண்டிற்கும் நண்மை
உண்டாக்கும். |
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலொ வன் சொல் வழங்குவது?
|
பொருள்:: |
(மறுமையைப்பற்றி எண்ணாவிட்டாலும் இம்மையிலேயே கண்ணாரப்
பார்க்கிறோம்) இனிய வார்த்தைகளால் இனிய பலன்கள் உண்டாவதைத் தினம் தினம் கண்ணுக்கு
முன்னால் பார்த்துக்கொணடிருக்கின்ற மனிதன். எதற்காகத் துன்பத்தை உண்டாக்குகிற
கடுஞ்சொற்களைப் பேசுகிறானோ தெரியவில்லை. |
இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.
|
பொருள்:: |
ஆகையினால் இனிய வார்த்தைகள் வேண்டிய மட்டும் இருக்கும் போது
துன்பமான வார்த்தைகளை பேசுவது ஒரு மரத்தில் பழங்கள் வேண்டிய மட்டும் இருக்க பழத்தை
விட்டுப் பச்சைகாய்களைப் பறித்துக்கொள்வது போலத்தான்.
|
|