|
இல்வாழ்வான் என்பான் இய்ல்பு உடைய
மூவர்க்கும் நல்லாற்றின் நின்றதுணை.
|
பொருள்::
|
மனைவி மக்களோடுவாழ்ந்து குடும்பம்
நடாத்துகிறவன் சமுதாயத்தில் உள்ள உறவினர், நண்பர்கள் எளியவர்களாகிய மூன்று
இனத்தாருக்கும் நல்ல முறையில் உதவியாக இருப்பான்.
|
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்
இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
|
பொருள்::
|
(மேலும்)துறவிகளுக்கும், பசித்திருக்கும்
எவருக்கும், நிலை கெட்டுப்போனவர்களுக்கும்
குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன்தான்
உதவியானவன். |
தென்புலதார்தெய்வம்விருந்து ஒக்கல்
தான்என்றுஆங்குஐம்புலத்துஆறுஓம்பல் தலை.
|
பொருள்::
|
(குடும்பியானவன் தன் கடைமைகளை எந்த
வரிசைக் கிரமத்தில் கவனிக்க வேண்டுமென்றால்) மூதாதைகளை பூசித்தல், தெய்வ வழிபாடு,
விருந்தாக வந்திருப்பவர்கள், வீட்டிலுள்ளவர்கள் என்ற வரிசை முறையில் செய்வன
செய்துவிட்டுக் கடைசியாக தனக்கு வேண்டியதைக் கவனிப்பதுதான் சிறந்த முறை.
|
பழி அஞ்சிப் பாத்தூஉண் உடைத்தாயின்
வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
|
பொருள்:: |
(அந்த
முறையில் தினம் தினம் கவனிப்பது
முடியாவிட்டாலும்) பழி பாவங்களுக்கு
பயந்து நடந்துகொண்டு உள்ளத்தில்
பிறர்க்கும் பங்கு கொடுத்து உண்டு
வாழ்க்கை நடாத்தினால் போதும். அது
இல்வாழ்க்கை முறைக்குக் குறைந்ததன்று. |
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
|
பொருள்:: |
(சுருக்கமாக சொன்னால்) எதைச்செய்தாலும்
அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும்
செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை.
அதனால் தமக்கும் உலகத்துக்கும் நல்ல
பயனுண்டாகும். |
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்து ஆற்றின் போஒய்ப்பெறுவது எவன்?
|
பொருள்:: |
தர்ம நெறி தவறாமல் மனைவி மக்களோடு
இல்வாழ்க்கைநடத்தினால் ஒருவன் துறவறத்துக்கு போய் அடையக்கூடிய நண்மை என்ன
இருக்கிறது? ஒன்றுமில்லை.
|
| |
இயல்பினான்
இல்வாழ்க்கைவாழ்பவன் என்பான் முயல்வாருள்
எல்லாம் தலை. |
|
பொருள்::
|
ஏனென்றால், சரியான முறையில் இல்வாழ்க்கை
நடத்துகிற குடும்பி, மேலான வாழ்வு பெற
தவநெறியில் முயற்சி செய்கிறவர்கள்
எல்லாரிலும் சிறந்தவன். |
ஆற்றின் ஒழுக்கி, அறம் இழுக்கா
இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
|
பொருள்:: |
(எப்படியென்றால்) முறைப்படி நடந்துகொண்டு
தர்மநியாயம் தவறாமல் குடும்பம்
நடத்துகிறவன் துறவுபூண்டு தவம்
செய்கிறவர்களைவிடப் பொறுப்பும்
சகிப்புத்தன்மையும் உடையவன். |
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ/தும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.
|
பொருள்:: |
(ஆகையினால்) மனிதனுக்கும் தர்மம் என்று
சொல்லப்படுவதே குடும்ப வாழ்க்கைதான்.
ஆனாலும் மற்ற நெறியை கடைப்பிடிக்கும்
துறவறத்தாரை அவதிகமலிருப்பது நல்லது. |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
|
பொருள்:: |
(கடவுளை
அடையவேண்டுமென்றுதானே
துறவறத்துக்குப்போகிறார்கள்?
துறவறத்துக்கு போகாமலேயே) உலகத்தில் வாழ
வேண்டிய முறைப்படி குடும்ப வாழ்க்கை
நடத்துகிறவன் வேறு முயற்சி இல்லாமலும்
வானத்தில் இருக்கிற தெய்வத்தோடு
சேர்க்கப்படுவான். |
|