கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

ஈகை.


 Users online ::

         

                        வறியார்க்கொன் றீவதே ஈ.கைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்::

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.


                           நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈ.தலே நன்று.

பொருள்::

 பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.


                         இலனென்னும் எவ்வம் உரையாமை ஈ.தல் குலனுடையான் கண்ணே யுள.

 

பொருள்::

 தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈ.வது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.


                       இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.

 

பொருள்::

 ஈ.தல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில்இ அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.


                         ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்.

 

பொருள்::

 பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.


                      அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

 

பொருள்::

 பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவேஇ தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

              
  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது.

 

பொருள்::

 பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.


                         ஈ.த்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்.

 

பொருள்::

ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர்இ பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?


                         இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல்.

 

பொருள்::

 பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்றுஇ குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

                          சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈ.த லியையாக் கடை.

 

பொருள்::

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com