|
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம் கூறான் என்றல் இனிது.
|
பொருள்::
|
ஒருவன் அறன் என்பதையே
அறியாதவானாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தால் அவன் கோள் சொல்ல
மாட்டான் என்பது சிறப்புடையது.
|
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன் அழிஇப் பொய்த்துநகை.
|
பொருள்::
|
(அரத்தை
அற்ந்தவனாக இருந்தும் அறிந்தே தவறு
செய்கிறவனானாலும்.) அறத்தினின்றும் நழுவி
அறமில்லாதவற்றாஇச் செய்வதை
ஒருவனைப்பற்றிப் பொய்யான கோள்களைச் சொல்லி
மகிழ்வது கொடியது. |
புறன் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின்சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்.
|
பொருள்::
|
(அப்படிக்
கோள் சொன்னால்தான் உயி வாழலாம் என்ற நிலமை ஏற்பட்டால்) கோள் சொல்லிப் பொய்யனாக
உயிர் வாழ்வதை விட செத்துப்போவது அறநூல்கள் சொல்லுகிற புண்ணியத்தையாவது
உண்டாக்கும்.
|
கண்நின்று கண் அறச்சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின் நோக்காச் சொல்.
|
பொருள்:: |
(கோள்
சொல்லுவது அப்போதைக்கு நணமையுண்டாக்குவது போலத் தோன்றினாலும் பின்னால்
சொல்லுகிறவனுக்கே கேடுண்டாகும்) ஒருவனுக்கு முன்னால் நின்று, அவனைத்
தட்சிண்யமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒருவன் முன்னால் இல்லாதபோது
பின்னால் வரக்கூடிய தீமைகளை எண்ணிப்பார்க்காமல் அவன் மீது கோள் சொல்லக்கூடாது.
|
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப்படும்.
|
பொருள்:: |
கோள் சொல்லுகிறது சொல்லுபவனுக்கே தீமைகளை
உண்டாக்கும்.ஏன் எனில்) நல்லது சொல்லும்
எண்ணமுள்ளவன் அல்லனென்பதைக் கோள்
சொல்லுகின்ற அர்பத்தனமே கோளைக்காதால்
கேட்கிறவனுக்கு காட்டிவிடும். |
பிறான் வழி கூறுவாந்தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்.
|
பொருள்:: |
(யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ
அவனே இவனைச் சந்தேகிப்பான்) இன்னொருவன் மேல் பழிசுமத்தக் கோள் சொல்லுகிறவன் தான்
யாரிடத்தில் கோள் சொல்லுகிறானோ அவனே தன்னை கோள் சொல்லும் குற்ற முள்ளவனாகக் அகுத
இடமிருக்கிறதே என்பதே தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
|
| |
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர். |
|
பொருள்::
|
(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாக்கும்
படி புனைந்து பேசி, மனமொத்ட்க்ஹ
நன்பர்களையும் பிரித்து
வைத்துவிடுவார்கல்ள். மகிழ்ச்சி
உண்டாக்கும் படி நல்ல வார்த்தைகளைச்
சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத்
தெரியாது. |
துன்னியார் குற்றமும் தூர்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு.
|
பொருள்:: |
நெருங்கிய நண்பர்களுக்கிடையிலும் குற்றம்
கூறித் தூற்றிப் பேசிப் பகமை
உண்டாக்குகிறது இனமாகிய இவர்கள் ஏற்கனவே
பகமை உள்ளவ்ர்களுக்கிடையில் என்ன
செய்யமாட்டார்கள். |
அறன்நோக்கி ஆற்றும்கொல் வயம்புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
|
பொருள்:: |
(இப்படிப்படவர்கள் இந்த உலகம் ஏன்
சுமந்துகொண்டிருக்கிறாது?) ஒருவன் இல்லாத
சமயம் பார்த்து அவனைப்பற்றி பொய்களைச்
சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய
பாரத்தையும் இந்தப் பூமி
சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக்
கருதியே. |
ஏதிலார்குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டோ மன்னும்
உயிர்க்கு?
|
பொருள்:: |
கோள் சொல்லுகிறவனானாலும் அதற்கு
காது கொடுக்கிறவனானாலும்) பிறரிடம் குற்றம் காண்பதைப்போல் தன் குற்றத்தையும்
காண்பானாகில் மனிதருக்கு கோள் சொல்லுவதனால் உண்டாகிற தீமைகள் இருக்குமா?
இருக்கமாட்டா.
|
|