|
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
|
பொருள்::
|
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக்
கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
|
பொருளாட்சி போற்றாதார்க் கில்லைஅருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
|
பொருள்::
|
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால்
உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை. |
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காதொன்றன்
உடல்சுவையுண்டார் மனம்.
|
பொருள்::
|
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும்இ ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர்
நெஞ்சமும்இ அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.
|
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
|
பொருள்:: |
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம்
ஆகாது.
|
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.
|
பொருள்:: |
உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள்
இருப்பதால்இ பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. |
தினற்பொருட்டால்கொல்லாதுலகெனின்யாரும்விலைப்பொருட்டால்ஊன்றருவா ரில்.
|
பொருள்:: |
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின்இ புலால் விற்பனை செய்யும்
தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
|
| |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின். |
|
பொருள்::
|
புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல்
இருக்கவேண்டும். |
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
|
பொருள்:: |
மாசற்ற மதியுடையோர்இ ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள். |
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
|
பொருள்:: |
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர்
உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
|
பொருள்:: |
புலால் உண்ணாதவர்களையும்இ அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா
உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். |
|