|
ஈ.த லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
|
பொருள்::
|
கொடைத் தன்மையும்இ குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது
வேறெதுவும் இல்லை.
|
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
|
பொருள்::
|
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே
அமையும். |
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.
|
பொருள்::
|
ஒப்பற்றதாகவும்இ அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர
வேறு எதுவுமே இல்லை.
|
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.
|
பொருள்:: |
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை
விடுத்துஇ அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.
|
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
|
பொருள்:: |
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக்
கொள்வதும்இ தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே
உரிய செயலாகும். |
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
|
பொருள்:: |
எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத்
துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
|
| |
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன். |
|
பொருள்::
|
உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள்இ அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே
தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? |
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
|
பொருள்:: |
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால்இ அது அந்த வாழ்க்கைக்கே
வந்த பழியென்று வையம் கூறும். |
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
|
பொருள்:: |
புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்இ இந்தப்பூமி நல்ல
விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். |
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
|
பொருள்:: |
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும்இ புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும்
ஒன்றுதான். |
|