கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

பிறனில் விழையாமை.


 Users online ::

         

                        பிறன் பொருளாள் பொட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து அறம் பொருள்கண்டார் கண் இல்.

பொருள்::

  இன்னொருவனுக்கு உரிமையான அவனுடைய மனைவியின் மேல் காம இச்சைகொண்டு அலைகிற மூடத்தனம் இல்லறத்தின் அர்த்தத்தை அறிந்தவர்களிடம் இருக்காது.


                           அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.

பொருள்::

இல்லற ஒழுக்கத்தில் கடை கெட்டவர்கள் எல்லாரிலும் இன்னொருவனுடைய மனைவியின் மேல் காம ஆசை கொண்டு அவனுடைய வாசலுக்குப் போகிற மூடன் வேறு யாருமில்லை.


                        விள்ந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவர்.

 

பொருள்::

  (அதிலும்) தன்னை மிகவும் நம்பியிருந்தவனுடைய மனைவியின் காம இன்பத்தை விரும்பியலைகிற ஒருவன்செத்த பிணத்துக்கு ஒப்பான்.


                       எனைத்துணையார் ஆயினும்என்னாம் துணைத் திணையும்தேரான் பிறன்இல் புகள்.

 

பொருள்::

  (யாரானாலும்) சிறிதேனும் எண்ணிப்பார்க்காமல் இன்னொருவனுடைய மனவியின் மேல் காமங்கொண்டு அவனுடைய வீட்டுக்குள் நுளைகிறவன்வேறு என்ன சிறப்புடையவனானாலும் என்ன பயன்?


                         எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.

 

பொருள்::

 (செல்வத்தாலும் செல்வாக்காலும் இந்தக் குற்ரத்தை எளிதாக செய்துவிடலாம்) ஆனால் அதன் விளைவு எளிதாக கிடைக்கிறதென்று இலேசாக மதித்துப் பிறனுடைய மனவியிடத்துக்கொண்ட காம ஆசையினால் நெறி கடந்து நடந்துகொள்ளுகிறவன்.என்றும் நிலைக்கக் கூடிய பழியை அடைவான்.


                      பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவா ஆம் இல் இறப்பான்கண்.

 

பொருள்::

 (பிறன் மனைவியின் மேல் காமங்கொள்வதால்) இன்னொருவனுடைய மனைவியிடத்தில் காமத் தொடர்பு நாடுகினறவனுக்கு அதனாலுண்டாகும் பகைமையின் வஞ்சினமும்,குற்றத்தின் பாவமும்,கண்டுகொண்டால் என்னவாகுமோ என்ற அச்சமும், பிறர் பேசும் பழிச்சொல்லும் ஆகிய நான்குமெப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

              
  அறன் இயலான் இல்வாழ்வானென்பான்பிறன் இயலாள் பெண்மை நயவா தவன்.

 

பொருள்::

   (உலகத்தில் இல்லறம் ஒழுங்காக நடைபெறுதற்குப் பிறனில் விளையாமைதான் பிரதானம் ஆதலால்) இல்லற முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் யாரென்றால், இன்னொருவனுடய இல்லறத்துக்காக வாழ்க்கைப்பட்டிருக்கின்ற பெண்ணின்காம இன்பத்தை விரும்பாதவன்.


                         பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றேஆன்ற ஒழுக்கு.

 

பொருள்::

வேறொருவனுடைய மனைவியை காமக்குறியோடு கண்ணெடுத்தும் பாக்காத மன உறுதியோடு யோக்கியர்கள் தங்களுடைய தர்மமாகாக்கொள்வார்கள். அது மட்டுமல்ல அவர்களுடைய ஒழுக்கமே அதுதான்.


                         நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில் பிறற்குஉரியாள் தோள் தோயாதார்.

 

பொருள்::

(அப்படிப்பட்ட மனஉறுதி உள்ளவர்கள் உலகத்தில் வெகுசிலரே. அதனால் இந்தக்குற்றம் உலகத்தில் அச்சமுண்டாக்கத்தக்கதாக இருக்கிறது.அப்படி) அச்சந்தரக்கூடியதாக உள்ள இந்த உலகத்தில் மெச்சத் தகுந்தவர்கள் யாரென்றால்.இன்னொருவனுடைய மனைவியைக் காம ஆசையினால் தீண்டாதவர்களே.

                          அறன் வரயான் அல்ல செயினும் பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று.

 

பொருள்::

 (ஆதலால்) இல்லற நெறியின் வரம்புக்கு மீறிய வேறூ குற்றங்களைச் செய்துவிட்டாலும்  இன்னொருவனுடைய வரம்பிற்கு உட்பட்டவளான அவன் மனைவியுடன் காம இன்பத்தை விரும்பாதிருக்கும் ஒரு நல்ல காரியமே நல்ல ஆறமாகும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com