கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

மயனில சொல்லாமை.


 Users online ::

         

                        பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.

பொருள்::

 ஒரு சபையில் உள்ள பல பேருக்குகோபம் உண்டாகும் படி பயனற்ற வார்த்தைகளை பேசுகின்றவன். எல்லாராலும் இழக்கப்பட்டு அவமானப்படுவான்.


                           பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது.

பொருள்::

(அவமானம் மட்டுமல்ல) பலபேருக்கும் முன்னால், வீண் வார்த்தைகலை பேசுவது, நண்பர்களிடத்தில் விரும்பத்தகாத குற்றங்களைச் செய்வதைவிடத் தீமைகளை உண்டாக்கக்கூடியது.


                        நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல பாரித்து உரைக்கும் உரை.

 

பொருள்::

 (ஏனெனில் அவன்மீது எல்லாருக்கும் வெறுப்புண்டாகும்) ஒரு சபையில் பிறருக்கு பாரமாக அலுப்புண்டாக்கும் படி வீண் வார்த்தைகளை அதிகமாக பேசுகின்ற பேச்சு அவன் பயனற்றவன் என்பதை வெளியாக்கிவிடும்.


                       நயன் சாரா நண்மையின்நீங்கும் பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லாரகத்து.

 

பொருள்::

   (பிறருக்கு அலுப்புண்டாக்குவதோடு அவனுக்கும் தீமை உண்டாக்கும்) பலபேர் கூடிய சபையில் பயனற்றதும் தகுதியற்றதுமான பேச்சை பேசுவது கேட்கிறவர்களுடைய இன்பத்தை கெடுத்துப் பேசுகின்றவனுக்கு வரக்கூடியநண்மைகளையும் தடுத்துவிடும்.


                         சீர்மை சிறப்போடு நீங்கும்பயன் இல நீர்மை உடையார் சொலின்.

 

பொருள்::

 (சாதரண மனிதர்களுக்கு மட்டுமல்ல கல்வி கேள்விகள் நிறைந்தது) மேலான நிலமையில் உள்ளவர்களானாலும் பலபேர் கூடிய சபையில் அவர்கள் வீண் வார்த்தைகளைப் பேசிவிடுவார்களானால் அப்போதே அவர்கள் சீரும் சிறப்பும் அவர்களை விட்டு நீங்கிவிடும்.


                      பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்.

 

பொருள்::

 (சபையில் பயனற்ற சொற்களையே திருப்பித் திருப்பிச் சொல்லுகிஅவனை) பயனற்ற பெச்சையே திருப்பித் த்ருப்பிப் பேசுகின்றவனை மனித்னென்றா சொல்ல முடியும்? மனிதப் பதர் என்றுதான் சொல்ல முடியும்.

              
  நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று.

 

பொருள்::

  (அதனால்) அறிவொழுக்கங்களாற் சிறந்தவர்கள் பிறரைக் கண்டிக்க அன்பில்லாத வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லுவார்கள். ஆனால் வீண் வார்த்தைகளை பேசமாட்டார்கள்.


                         அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல்.

 

பொருள்::

(அறிவொழுக்கதிற் சிறந்திருத்தலோடு பிறவிப் பயனை அற்ந்தவர் ஆராய்ந்து பேசுவார்) அருமையான மனிதப் பிறவியினால் அடயக்கூடிய பயன்களை ஆரயக்கூடிய அறியுடையவர்கள் பிறருக்கு மிகுந்த நண்மையை உண்டாக்கக்கூடிய பேச்சையன்றி வேற எதையும் பேசமாட்டார்கள்.


                         பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர்.

 

பொருள்::

அறிவொழுக்கத்தோடு பிறவிப் பயனையும் அறிந்து அதன் மேலும் ஆசாபாச மயக்கங்களை ஒழித்தவர்கள்) உலக ஆசைகளின் மயக்கங்களை ஒழித்துவிட்ட மெய்யறிவுடையவர்கள் எப்போதும் எங்கே பேசினாலும் பயனில்லாத வார்த்தைகளைமறந்தும் பேசிவிட மாட்டார்கள்.

                          சொல்லுக சொல்லின் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.

 

பொருள்::

 (ஆகையினால்) பயனுள்ள வார்த்தைகளையே ஆரய்ந்து பொறுக்கியெடுத்துப் பேச வேண்டும் வீண்வார்த்தைகளை ஆரய்ந்து பொறுக்கியெடுத்து விலக்க வேண்டும


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com