|
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
|
பொருள்::
|
ஆசையைஇ எல்லா உயிர்களிடமும்இ எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை
என்று கூறலாம்.
|
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
|
பொருள்::
|
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு
ஏற்படுகிற துன்ப நிலைஇ ஆசைகளை ஒழிக்காவிடில் வரும். |
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈ.ண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.
|
பொருள்::
|
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு
எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
|
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
|
பொருள்:: |
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே
வாய்க்கும்.
|
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்.
|
பொருள்:: |
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர்இ தூய துறவியாக
மாட்டார். |
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
|
பொருள்:: |
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவேஇ ஆசைக்கு
அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
|
| |
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். |
|
பொருள்::
|
கெடாமல் வாழ்வதற்குரிய நிலைஇ ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்குஇ அவன் பேராசைக்
குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும். |
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
|
பொருள்:: |
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால்இ அதைத் தொடர்ந்து துன்பமும்
மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும். |
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்.
|
பொருள்:: |
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். |
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
|
பொருள்:: |
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலைஇ நீங்காத இன்பத்தை இயல்பாகவே
தரக்கூடியதாகும். |
|