கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

அறன் வலியுறுத்தல்.


 Users online ::

         

                        சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉக்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பொருள்::

தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும் வராமல். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன எருக்கிறது?


                           அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.

பொருள்::

தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும்.இல்லை தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.

                        ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல்.

 

பொருள்::

அதனால் முடிந்தவரையிலும் தர்ம காரியங்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் மறக்காமல் செய்ய வேண்டும்.


                       மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற.

 

பொருள்::

மனத்தில் குற்றமான நோக்கமில்லாமல் செய்கிற நல்ல காரியந்தான் அறம் என்பது. ஒரு சுயநல நோக்கத்தைக் கொண்டு எந்தத் தர்மம் செய்தாலும் அது வெறும் ஆடம்பரந்தான் அறமாகாது.


                         அழுக்காறு அவா வெகுளி இன்னாச் செய்தல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

 

பொருள்::

பொறாமை, ஆசை, கோபம் கடுஞ்சொல் ஆகிய நானகையும் நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்காளேயாகும்.


                        அன்று அறிவாம் என்னாதுஅறம் செய்கமற்று அது பொன்றுங்கால் பொன்றாத்துணை.

 

பொருள்::

(அறம் செய்வதை ஒத்திப் போடக்கூடாது) பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு வைக்க கூடாது உடனே செய்ய வேண்டும் அப்படிச்செய்ததன் பலன் உடல் இறந்த பிறகும் உயிருக்கு உதவி செய்ய துணையாகும்.

              
  அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை

 

பொருள்::

பல்லக்கைச் சுமக்கிற மனிதனையும், பல்லகில் இருந்து சவாரி செய்கிற மனிதனையும்கவனித்து ஆலோசித்தால் அறம் செய்யாவிட்டால் என்ன துன்பம் என்பதையும், அறம் செய்தால் என்ன இன்பம் என்பதையும் யாரு சொல்லாமலேயே அறிந்து கொள்ளலாம்.


                         வீழ்நாள் படா அமை நன்று ஆற்றின் அ/துஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.

 

பொருள்::

(பல்லக்கில் சவாரி செய்கிறசுகம் சொற்ப அறம் செய்ததால் வந்தது. மிகுந்த அறம் செய்கிறவர்கள் அதைவிட மேலான இன்பங்களை அடையலாம்) சாகிற வரையிலும் தர்மங்களையே செய்கிறவர்கள் பிறவாதிருக்கிற பேரின்பத்திஅயும் பெறலாம்.


                         அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் புறத்து புகழும் இல.

 

பொருள்::

(பேரின்பத்தைக் கருதாவிட்டாலும்) அறங்களைச் செய்து அதனால் அடைகிற மகிழ்ச்சிதான் நல்ல இன்பம். அது புகழும் தரும் மற்ற இன்பங்களெல்லாம் அப்படிப்பட்ட நல்லவையல்ல. அவற்றால் புகளும் கிடைக்காது.


                          செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு உயற்பால ஓரும் பழி.

 

பொருள்::

(ஆகையினால்) ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டுமென்பது அறச்செயல்தான். செய்யாமல் விலக்கிவிட வேண்டும் என்பதுபழி பாவச் செயல்களேயாம்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com