கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

அழுக்காறாமை.


 Users online ::

         

                        ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்::

பிறருடைய நல்வாழ்வைக் கண்டு பொறாமைப்படாமலிருக்கிற குணத்தை ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கை நெறி முறையாக மனத்தில் வைக்க வேண்டும்.


                           விழுப் பேற்றின் அ/து ஒப்பதுஇல்லை யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்::

யாருடைய நல்வாழ்வைக்கண்டும் பொறாமை கொள்ளாத மனப்ப்பாண்மை அடைந்துவிட்டால். விரும்பத்தக்க மேலான செல்வங்களும் அதற்கு இணையாவது வேறில்லை.


                        அறம் ஆக்க வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் பேணா அழுக்கறுப்பான்.

 

பொருள்::

 (பொறாமையினால்தான்) பல பாவச்செயல்களைச் செய்து தர்ம பலம் குறைகிறது, பிறருடைய நல்வாழ்வைக்கண்டு பொறாமைப் பட்டுக்கொண்டிருப்பவன் தர்ம பலத்தை இழந்துவிடுகிறான்.


                       அழுக்காற்றின் அல்லவைசெய்யார் இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து.

 

பொருள்::

  (தர்ம பலத்தை மதிக்கிறவர்கள்) பொறாமைப்பட்டி அறமல்லாத காரியங்களைச் செய்துவிட மாட்டார்கள். ஏனெனில் பொறாமைக் குற்றத்தால் விளையக்கூடிய தீமைகளை அவர்கள் அறிவார்கள்.


                         அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது.

 

பொருள்::

 (வேறு ஒரு குற்றம் செய்யாவிட்டாலும் பொறாமைக்குணமே ஒருவனைக் கெடுத்துவிடும்) பொறாச்மைக்குணம் உள்ளவர்களுக்கு கேடுண்டாக்க அதுவே போதும். பகைவர்களால் க்ர்டுக்க முடியாதவனையும் அது கெடுத்துவிடும்.


                      கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

 

பொருள்::

(பொறாமையுள்ளவன் ஒருவருக்கொருவர் தனங்குடுப்பதை கண்டால் கூட பொறுக்க மாட்டார்கள் அதனால்) தானங்கொடுப்பதைக்கூடக் கண்டு பொறாமைபடுகிறவனுடைய குடும்பம் உண்வும் உடையும் அற்றுத் தவிக்கும்படியான தரித்திரத்தை அடைந்துவிடும்.

              
  அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டிவிடும்.

 

பொருள்::

 (அவன் செல்வமுடையவனாக இருந்தாலும் அது போய் வறுமை வந்துவிடும் எப்படியெனில்) பொறாமைப்படுகிறவனிடத்தில் வெறுப்புக்கொண்டு சீதேவியானவள் தன் அக்காளாகிய மூதேவியிடம் அவனக்காட்டிவிட்டு  அவன விட்டுப் போய்விடும்.


                         அழுக்காறு என ஒரு பாவிதிருச் செற்று தீயுழி உய்த்துவிடும்.

 

பொருள்::

 (அதனால்) பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து பல தீமைகளிலும் தள்ளிவிடும்.


                         அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்.

 

பொருள்::

 (ஆனல் பொறாமைக்குணம் உள்ளவர்கள் உலகத்தில் செல்வத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம் என்பதென்றால்) பொறாமை மனமுள்லவன் செல்வமுள்ளவனாக இருப்பதும், செம்மையான மனமுள்ளவன் ஏழையாக ஏழையாக இருப்பதும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்தான்.

                          அழுக்கற்று அகன்றாரும் இல்லை அ/து இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

 

பொருள்::

 (எப்படியெல்லாம் சிந்தித்துப்பார்த்தாலும்) பொறாமையினால் செல்வம் பெருகினவர்களும் இல்லை பொறாமை இல்லாமல் செல்வப் பெருக்கு இல்லாது போனவர்களும், இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதனால் பொறாமையுள்ளவனிடத்தில் செல்வமிருப்பதற்க்கும் பொறாமை இல்லாதவனிடத்தில் வறுமை இருப்பதற்கும் வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com