|
திரு
திருமதி சுந்தரலிங்கம் அவர்களின் அன்புச் செல்வி
பிரியதர்சினி.
அவர்கள் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில்
22.09.1995 அன்று இலங்கை அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட
கொடூர குண்டுவீச்சினால் மரணமடைந்த
மாணவர்களோடு இச்சிறுமியின் மரணமும்
அடங்கப்ப்ட்டிள்ளது.
இவர். திரு திருமதி சுந்தரலிங்கம் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,
தர்மராசா, பார்த்திபராசா, கிருபாகரன்,
சண்முகப்பிரியா ஆகியோரின் அன்புச்சகோதரியும், ஆவார்.
செல்வி பிரியதர்சினி இக்குண்டு வீச்சினால்
இருபது மாணவர்களுடன்
இவரும் இறைவனடி சேர்ந்தார். இவர்களது
ஆத்மா சாந்தியடைய எமது கிராம மக்கள் ஆழ்ந்த
துக்கத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
இவர்களுக்கு நாகர்மணல்.கொம் தமது
ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியினையும்
தெரிவிக்கின்றது.
|