|
பாடல்::
அம்மா
அழகினொளிய
பாடியவர்::
ஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்::
காதல் ஓவியம்
வரிகள்:: வைரமுத்து
அம்மா அழகே உலகின் ஒளியேஅம்மா
அழகே உலகின் ஒளியே
என் சங்கீதம்
உன் கீதமே....
உனை நான் அழைத்தால்
விழியில் மழையே
அம்மா அழகே உலகின் ஒளியே
ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது
என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
கனவுகலே வழிவிடுங்கள் கலைமகளை வரவிடுங்கள்
மலரில் உறங்கும் பூங்காற்று அதனை எழுப்பும் என் பாட்டு
ஓடும் நிலாவே ஒளிதீபம் ஏற்று
ராகமே உயிராகுமே அது பெற்றுத் தரும் முத்துச் சரம்
சந்தம் தரும் பொன்வேதமும் இன்பம் தரும் பொன்மந்திரம்
பொங்கும் தீயெனை சுற்றிச் சுடுமே
எங்கும் இசை அதை வற்றிச் சுடுமே
இந்த வெப்பம் என்னை என்ன செய்யும் சந்தனங்கள் பூசுமோ
உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு அதனை வெப்பம் தீண்டுமோ
படபட படவென எரிகிற கொழுந்து
இமைகளை உரசுது இது ஒரு அழகு
வேரும் தொடாது தீயில் விழாது யாரும் தொடாத சுருதி
அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட தேவி வருவது உறுதி
என் தேவி வருவது உறுதி
|